டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

12 மணி நேரம் வேலை செய்ய நாங்கள் அடிமைகளோ, ரோபோக்களோ அல்ல!

தேச பக்திக்காகவும், நாட்டின் நலனுக்காகவும் நேரம், காலமின்றி அலுவலகத்தில் வேலை செய்டு விட்டு குடும்பத்தை கவனிக்காமல் விட்டு விட முடியாது

News image
Updated On :24 ஜனவரி 2024, 7:01 pm

கார்த்திகா வாசுதேவன்

உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என மோடி அறிவித்ததை அடுத்து மற்ற எல்லாத் துறை அலுவலர்களைக் காட்டிலும் வங்கி ஊழியர்களே மிக மோசமான பணிச் சுமையில் சிக்கித் திணறிக் கொண்டிருக்கிறார்கள். . ரூபாய் நோட்டு விவகாரத்தில் நாள் முழுதும் ஏ.டி.எம் மையங்களிலும், வங்கிகளிலும் கடும் சலிப்புடன் காத்திருக்கும் மக்களை சமாதானப் படுத்தும் முயற்சியாக அறிவிப்பு வெளியான 50 நாட்களுக்குள் புது ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்கும் வேலை துரிதப் படுத்தப் பட்டிருக்கிறதாம். இதனால் ரிசர்வ் வங்கியின் ரூபாய் நோட்டுக்கள் அச்சடிப்புக் கூடங்களில் பணி புரியும் ஊழியர்கள் நாளொன்றுக்கு 12 மணி நேரத்துக்கும் அதிகமாக அவர்கள் உழைக்க வேண்டியதாக இருக்கிறது. புது ரூபாய் நோட்டுக்களை அச்சடிப்பது அவசியம் தான். ஆனால் தேச பக்திக்காகவும், நாட்டின் நலனுக்காகவும் நேரம், காலமின்றி அலுவலகத்தில் வேலை செய்டு விட்டு குடும்பத்தை கவனிக்காமல் விட்டு விட முடியாது இல்லையா? தொடர்ந்து நிலவும் வேலைப் பளுவால் எங்களது ஊழியர்களில் பலர் உடல் நலக் கோளாறுகளால் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் மேலும் எங்களால் 12 மணி நேரத்திற்கு அதிகமாக உழைக்க முடியாது. எனவே வேலை நேரம் 9 மணி நேரமாக குறைக்கப்பட வேண்டும். என மேற்கு வங்காளத்தில் உள்ள ரிசர்வ் வங்கியின் ரூபாய் நோட்டு அச்சடிப்புக் கூடத்தின் அலுவலர்கள் கோரிக்கை எழுப்பியுள்ளனர்.

ரிசர்வ் வங்கி சார்பில் ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் கூடங்கள் இந்தியாவெங்கும் சில இடங்களில் இயங்குகின்றன. அவற்றில் கிழக்கு மற்றும் வட கிழக்கு மாநிலங்களுக்கான ரூபாய் நோட்டுகள் மேற்கு வங்கத்தின் சல்போனி எனும் இடத்தில் அச்சடிக்கப் படுகிறது. மேற்கு வங்கம் திரிணாமுல் காங்கிரஸ் அரசின் ஆளுகைக்குட்பட்ட 'பாரதிய ரிசர்வ் பேங்க் நோட் முத்ரன் பிரைவேட் லிமிடட்' ஊழியர்கள் சம்மேளனத்தின் கீழ் இயங்கும் வங்கி ஊழியர்களின் மனக்குமுறல் தான் இது!. இவர்களின் மனக்குமுறலுக்கு மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்கவிருக்கிறது என்பதை மோடி சொன்னது போல மேலும், மேலும் பொறுத்திருந்து பார்க்கலாம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.