தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

அரசியல் ஆசை எல்லாம் பழங்கதை: வடிவேலு!

மிழக மக்களை எனது நகைச்சுவையில் திணறடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துவேன். அரசியல் ஆசைகள் எல்லாம் பழங்கதைகள் ஆகட்டும். இனி எப்போதும் அரசியல் பக்கம் திரும்புவதாக இல்லை

News image
Updated On :19 டிசம்பர் 2016, 12:25 pm

2011 சட்டமன்றத் தேர்தலின் போது வடிவேலு தி.மு.க வுக்கு ஆதரவாகத் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். ஆனால் அந்தத் தேர்தலில் தி.மு.க படுதோல்வி அடைந்தது. வடிவேலு தி.மு.க ஆதரவுப் பிரச்சாரத்தில் எதிரணித் தலைவர்களை குறிப்பாக தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் உள்ளிட்டோரை மிகக் கடுமையாக விமரிசித்திருந்தார். அப்போது தே.மு.தி.க ஆளுங்கட்சியான அ.தி.மு.கவுடன் கூட்டணி வைத்திருந்ததால் அடுத்த சில ஆண்டுகளுக்கு வடிவேலுவின் சினிமா வாய்ப்புகள் அஸ்தமித்தன. அதனால் சில ஆண்டுகளுக்கு வடிவேலு தமிழ் திரையுலகை விட்டு ஒதுங்கி இருந்தார். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகத் தான் அவரது வாய்ப்புகள் அஸ்தமித்தனவா என்ற கேள்விக்கு மறுப்புத் தெரிவிக்கும் விதமாக வடிவேலு:

அப்படியெல்லாம் இல்லை. அந்த நேரத்திலும் ரஜினியின் ‘லிங்கா’ உட்பட இருபதுக்கும் மேற்பட்ட பட வாய்ப்புகள் வந்த வண்ணமே இருந்தன. ஆனால் அந்தப் படங்களில் எனது நகைச்சுவைக்கு பெரிதாக முக்கியத்துவம் இல்லை என்று நான் நினைத்த காரணத்தால் அந்த வாய்ப்புகளை ஒப்புக் கொள்ளவில்லை என்பதே நிஜம். ஆனால் கடவுள் விஷாலின் ‘கத்திச் சண்டை’ மூலமாக மீண்டும் ஒரு நல் வாய்ப்பை அளித்திருக்கிறார். எனது திரைப்பட வாழ்க்கையில் இனி ஒரு தடங்கல் நிகழ வாய்ப்பில்லை, இனி தமிழக மக்களை எனது நகைச்சுவையில் திணறடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துவேன். அரசியல் ஆசைகள் எல்லாம் பழங்கதைகள் ஆகட்டும். இனி எப்போதும் அரசியல் பக்கம் திரும்புவதாக இல்லை. என்றார்.

கத்திச் சண்டை மட்டுமல்ல அடுத்ததாக ‘இம்சை அரசன் 2’ மற்றும் ஜி.வி. பிரகாஷ் நாயகனாக நடிக்க இன்னும் பெயரிடப்படாத திரைப்படம் ஒன்றிலும் வடிவேலு நடிக்க இருக்கிறாராம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.