நெய் மற்றும் வெண்ணெயில் பிசைந்த உருளைக்கிழங்கு அல்லது ஸ்டார்ச் மாவு கலந்துள்ளதா என்பதை அறிய அரை டீஸ்பூன் நெய் மீது மூன்று டீஸ்பூன் டிங்சரை விட்டால் அது நீல வண்ணமாக மாறும். அதை வைத்து நெய் சுத்தமானதா அல்லது கலப்பட நெய்யா என்பதை எளிதில் அறிந்து கொள்ள முடியும்.
தேனில் சர்க்கரை கரைசல் கலப்படம் செய்யப்பட்டிருக்கிறதா என்பதை அறிய தேனை நீருடன் கலந்து சோதித்துப் பார்த்தால் போதும். ஏனெனில் உண்மையான தேன் நீருடன் கலக்காது.
சர்க்கரை, வெல்லம் போன்றவற்றில் சாக்பீஸ் தூள் கலப்படம் செய்யப்பட்டிருந்தால் அப்பொருட்களை நீரில் கரைக்கும் போது டம்ளரின் அடியில் மாவுப் பொருள் படிவதைக் காணலாம். இதை வைத்து சர்க்கரை, வெல்லத்தில் கலப்படம் செய்யப்பட்டிருப்பதை எளிதில் கண்டறிய முடியும்.