ராஜஸ்தான் ஆஜ்மீரைச் சேர்ந்த பிரபல கைவினைக் கலைஞர் அல்கா மாத்தூர் தன்னுடைய பிரத்யேக கலைத்திறன் பற்றி என்ன சொல்றாங்க தெரியுமா? கலைகளின் பிறப்பிடமான வண்ணமயமான ராஜஸ்தானைச் சேர்ந்த தனக்கு அடிப்படையில் கலைகளின் மீதான ஆர்வம் இயல்பிலேயே இருந்தது என்றும் அதற்கான உந்துதலை நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு உள்ளிட்ட பஞ்ச பூதங்களான இயற்கை சக்திகளிடம் இருந்தே தான் பெற்றுக் கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். இவர் எங்கு பயணம் மேற்கொண்டாலும் சரி; அது கார் ஆகட்டும், ரயிலாகட்டும், விமானமாகட்டும் எதில் பயணித்தாலும் ஜன்னலை மூடிக் கொண்டு அப்படியே தூங்கி விடுவதில்லையாம். ஜன்னல்களை எப்போதும் விரியத் திறந்து வைத்து அதன் வழியாக தன்னைக் கடந்து செல்லும் விரிந்து பரந்த இந்த உலகத்தை ரசனையோடு பார்த்து ரசித்து அதை அப்படியே அழகான ஓவியங்களாக்கி விடுவதில் வல்லவராம். இந்த ஓவிய ரசனை தான் இவரை தனது கலைத் திறனில் அடுத்தடுத்த படிகளை நோக்கி நடத்திக் கொண்டு செல்கிறதென்று அவர் கூறுகிறார்.

இயற்கை மீதான இவரது ரசனைக்கு இவரால் உருவாக்கப்பட்ட டீ பேக் கலைப்படைப்புகள் மிக முக்கிய உதாரணங்கள். இவரது ஓவியக் கண்காட்சியில் முக்கால்வாசியும் இடம்பெறக்கூடியவை இந்த டீ பேக் புத்தகங்கள் மற்றும் ஓவியங்களே! இவரது சமீபத்திய ஓவியக் கண்காட்சி ஓவியங்கள் அனைத்தும் இதற்கு மிகச் சிறந்த உதாரணங்கள். பிரசித்தி பெற்ற மும்பை ஜெ.ஜெ. ஸ்கூல் ஆஃப் ஆர்ட்ஸ் மாணவியான அல்கா மாத்துர் இயற்கை சாயமேற்றும் முறை மற்றும் கந்தா பிரிண்டிங் போன்றவற்றிலும் மிகுந்த ஆர்வமுடையவர். இவருடைய படைப்புகளான ஓவியங்கள், கைத்தறிப் புடவை டிசைன்கள், இயற்கச் சாயமுறை என அனைத்துமே இயற்கைப் பொருட்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப் படுபவை என்பதோடு பாரம்பரிய மற்றும் சமகாலத் தொடர்புடையவையாகவும் உருவாக்கப் படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்க அம்சங்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அவிநாசி நகருக்குள் வராத பேருந்துகள்: பொதுமக்கள் அவதி

மொடக்குறிச்சியில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு: இளம் வாக்காளா்கள் வாக்களிக்க ஆா்வம்

சா்வதேச கராத்தே போட்டி: காடையூா் விவேகானந்தா அகாதெமி பள்ளி மாணவருக்கு வெள்ளிப் பதக்கம்

தேசியவாத காங்கிரஸ் தலைவா் கொலை வழக்கு: அமித் ஜோகிக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


