திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தயாரிப்பாளர் கே.ராஜன் மறைவு: ராமதாஸ், திருநாவுக்கரசர் இரங்கல்

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் நடிகருமான கே. ராஜன் மறைவையொட்டி, பாமக நிறுவனர் ச. ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளது தொடர்பாக...

News image

தயாரிப்பாளர் கே.ராஜன் மறைவையொட்டி, பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல் - கோப்புப்படம்

Updated On :18 மே 2026, 1:31 pm IST

தமிழ்த் திரைப்பட உலகின் பிரபல தயாரிப்பாளரும், சிறந்த கதாசிரியரும், இயக்குநரும், நடிகருமான தயாரிப்பாளர் கே.ராஜன் மறைவுக்கு பாமக நிறுவனர் ச. ராமதாஸ், காங்கிரஸ் முன்னாள் மக்களவை உறுப்பினர். சு.திருநாவுக்கரசர் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

தமிழ்த் திரைப்பட உலகின் பிரபல தயாரிப்பாளரும், சிறந்த கதாசிரியரும், இயக்குநரும், நடிகருமான தயாரிப்பாளர் கே.ராஜன் உயிரிழந்த செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் ஆழ்ந்த மனவேதனையும் அடைந்தேன்.

திரைப்படத் தயாரிப்பாளராக மட்டுமன்றி, திரைப்படத் துறையின் பல்வேறு பிரச்னைகள் குறித்து துணிச்சலாக குரல் கொடுத்து வந்தவர் கே.ராஜன். தன்னம்பிக்கை, நேர்மை, மன உறுதி ஆகியவற்றின் அடையாளமாக திகழ்ந்த அவர், பொது வாழ்விலும் சமூக அக்கறையுடன் செயல்பட்ட நல்ல மனிதர்.

தமிழ்த் திரைப்படத் துறையின் நலனுக்காக தொடர்ந்து போராடிய ஒரு மனிதர் இவ்வாறு உயிரிழந்திருக்கிறார் என்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. அவரது இழப்பு தமிழ்த் திரைப்பட உலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

அவரது உயிரிழப்புக்கான காரணங்களை காவல்துறை விரைந்து மற்றும் முழுமையாக விசாரித்து உண்மையை வெளிக்கொணர வேண்டும்.

தயாரிப்பாளர் கே.ராஜனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், அவரது நிறுவனத்தைச் சார்ந்தவர்களுக்கும், ஒட்டுமொத்த தமிழ்த் திரைப்படக் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

சு. திருநாவுக்கரசர்(காங்கிரஸ்)

திரைப்பட தயாரிப்பாளரும், நடிகரும், பத்திரிகையாளருமான அருமை சகோதரர் திரு.கே. ராஜன் அவர்கள் அகால மரணமடைந்தார் எனும் செய்தி அறிந்து மனம் மிக வருந்துகிறேன்.

அன்னாரின் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், திரையுலகினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தை துயருடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

முஹம்மது ஷிப்லி (இந்திய தவ்ஹீத் ஜமாஅத்)

பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் கே.ராஜன் உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.

திரைத்துறையில் தனித்துவமான கருத்துகளாலும்,சமூக அக்கறை கொண்ட பேச்சுகளாலும் அறியப்பட்ட ஆழமான சிந்தனையாளரான அவரின் மறைவு பெரிய இழப்பாகும்.

அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், திரைத்துறை உறவுகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், எந்த ஒரு சிக்கலுக்கும் தற்கொலை ஒருபோதும் தீர்வாகாது என்பதை அனைவரும் உணர வேண்டும். வாழ்க்கையின் கடினமான தருணங்களில் மனம் தளராமல், நமக்கு பிடித்தவர்களின் உதவியோடு அடுத்த நிலையை நோக்கி நகர்ந்து செல்வதற்கு முயற்சிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

Summary

Regarding the condolence message conveyed by PMK Founder S.Ramadoss following the passing of Tamil film producer, director, and actor K. Rajan...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.