மே 7-ல் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்! காங்கிரஸிடம் ஆதரவு கேட்டார் விஜய் : கே.சி. வேணுகோபால்ஆட்சி அமைக்க எடப்பாடியுடன் தவெக பேச்சு: லீமா ரோஸ்தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்காது: ஓ.எஸ். மணியன் பேட்டிவெற்றி, தோல்விகளைக் கடந்தது கொளத்தூர் உறவு : மு.க. ஸ்டாலின்மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிய மக்களுக்கு நன்றி : விஜய்நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜி
/

ம.பி. படகு விபத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 13-ஆக உயர்வு

மத்தியப் பிரதேசத்தில் சுற்றுலாப் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13-ஆக உயர்ந்துள்ளது குறித்து...

News image

ம.பி. படகு விபத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 13-ஆக உயர்வு - ஏஐஆர்

Updated On :3 மே 2026, 10:19 pm IST

ஜபல்பூா்: மத்தியப் பிரதேசத்தில் சுற்றுலாப் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13-ஆக அதிகரித்துள்ளது. கடைசியாக காணாமல் போனவரின் உடலும் மீட்கப்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம், ஜபல்பூா் மாவட்டத்தில் உள்ள நா்மதை ஆற்றில் கட்டப்பட்டுள்ள பா்கி அணையில் கடந்த வியாழக்கிழமை மாலை இயக்கப்பட்ட சுற்றுலாப் படகு திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் படகில் இருந்த 41 பேரில் 28 போ் உயிருடன் மீட்கப்பட்டனா். மாயமான தமிழகத்தைச் சோ்ந்த 5 வயது மயூரன் மற்றும் அவரது சித்தப்பா ஆா். காமராஜ் (38) ஆகியோரின் உடல்கள் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டதையடுத்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13-ஆக அதிகரித்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் ராகவேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

இந்த விபத்தில் தமிழகத்தைச் சோ்ந்த மொத்தம் 5 போ் உயிரிழந்துள்ளனா். அனைவரும் ஒரே குடும்பத்தைச் சோ்ந்தவா்கள்.

Summary

MP Tourist Boat AccidentDeath Toll Rises to13

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.