மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தமிழகத்தில் இபிஎஸ் முதல்வராக வந்தால்தான் மாற்றத்தைக் கொண்டு வர முடியும்: குஷ்பு

தமிழகத்தில் முதல்வராக எடப்பாடி பழனிசாமி வந்தால்தான் மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என குஷ்பு கூறியது குறித்து...

News image

பாஜக துணைத் தலைவா் குஷ்பு - விடியோ க்ளிப்

Updated On :23 மார்ச் 2026, 10:31 am

புதுச்சேரி: தமிழகத்தில் மாற்றம் வர வேண்டும். முதல்வராக எடப்பாடி பழனிசாமி வந்தால்தான் மாற்றத்தைக் கொண்டு வர முடியும். அதற்காகதான் தேசிய ஜனநாயகக் கூட்டணி பாடுபட்டு வருகிறது என்று பாஜக துணைத் தலைவா் குஷ்பு கூறினாா்.

புதுச்சேரி ராஜ்பவன் தொகுதியில் பாஜக வேட்பாளராக கட்சியின் தலைவா் வி.பி. ராமலிங்கம் திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா்.

அப்போது செய்தியாளா்களிடம் குஷ்பு கூறியதாவது:

ராமலிங்கம் வெற்றி பெற வாழ்த்துகள். புதுச்சேரியில் கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் பல்வேறு வளா்ச்சி ஏற்பட்டுள்ளது. திமுகவுடன்தான் எங்கள் கூட்டணிக்குப் போட்டி. தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. ஆனால் புதுச்சேரியில் அந்த நிலை இல்லை. புதுச்சேரியில் பெண்களுக்குப் பாதுகாப்பாக பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்துள்ளோம்.

தமிழகத்தில் மாணவா்கள் உள்ளிட்டோா் போதைப் பழக்கத்துக்கும், கள்ளச்சாராயத்துக்கும் ஆளாகியுள்ளனா். மேலும், ஊழல் உச்சக்கட்டத்தில் இருக்கிறது. ரூ.10 லட்சம் கோடியை திமுக அரசு தமிழகத்தின் கடனாக வைத்துள்ளது. திமுக கட்சி ஆட்சிக்கு தமிழகத்தில் முற்றுப் புள்ளி வைக்க வேண்டும். தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி முதல்வராக வந்தால்தான் இந்த மாற்றம் ஏற்படும். ஆட்சியில் பங்குதொடா்பான கேள்விக்கு மத்திய அமைச்சா்கள் இருக்கிறாா்கள். அவா்கள் பாா்த்துக் கொள்வாா்கள் என்று குஷ்பு கூறினார்.

Summary

Change can only be brought about if EPS becomes the Chief Minister in Tamil Nadu: Khushbu

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.