திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

தில்லியில் அரசுப் பேருந்து மோதி 2 பேர் பலி! பேருந்தை எரித்த மக்கள்!

தில்லியில் அரசுப் பேருந்து மோதியதில் இருவர் பலியானது பற்றி...

News image

பேருந்து எரிப்பு - IANS

Updated On :9 மார்ச் 2026, 11:47 am

தில்லியில் வேகமாக இயக்கப்பட்ட அரசுப் பேருந்து பல வாகனங்கள் மீது மோதியதில் இருவர் பலியாகியுள்ளனர்.

தில்லியின் நிஹால் விஹாரில் திங்கள்கிழமை (மார்ச் 9) வேகமாக வந்த அரசுப் பேருந்து, சாலையில் சென்று கொண்டிருந்த பல வாகனங்கள் மீது மோதியது. இதில் இரண்டு பேர் உயிரிழந்ததாகவும் ஒருவர் காயமடைந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

நஜாப்கர் பகுதியிலிருந்து வந்த அந்த அரசுப் பேருந்து, நஜாப்கர் - நங்லோய் சாலையில் ஒரு ஸ்கூட்டர், ஒரு மோட்டார் சைக்கிள், ஒரு ஹேண்ட்ரிக்க்ஷா மற்றும் அங்கு நடந்து சென்ற மக்கள் மீது மோதியதாகவும் காலை 9.45 மணிக்கு இந்த சம்பவம் நடந்ததாகவும் கூறினர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக போராட்டம் நடத்திய ஒரு குழுவினர், ஆத்திரமடைந்து சம்பவத்திற்குக் காரணமான பேருந்தைச் சேதப்படுத்தியதோடு, மற்றொரு அரசுப் பேருந்தையும் தீயிட்டுக் கொளுத்தினர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் இந்த விபத்து தொடர்பாக பேருந்தின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து இதுபற்றிய விசாரணை நடைபெற்று வருகிறது.

Summary

Two killed in speeding DTC bus collision in Delhi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.