மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

நாடாளுமன்றத்தைவிட்டு ஓடிவிட்டார் மோடி! மேற்காசியப் போர் பற்றி விவாதிக்க வேண்டாமா? - ராகுல் காந்தி

மேற்காசியப் போர் பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்க ராகுல் காந்தி வலியுறுத்துவது பற்றி...

News image

ராகுல் காந்தி - IANS

Updated On :9 மார்ச் 2026, 10:56 am

மேற்காசியப் போர் விவகாரம் முக்கியமானது இல்லையா? அதுபற்றி விவாதிக்கத் தேவையில்லையா? என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

இஸ்ரேல் - ஈரான் போரால் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு எரிசக்தி துறையில் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ள சூழலில் அதுபற்றி விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் எம்.பி.க்கள் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நாடாளுமன்ற அவைகளிலும் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.

இதன்பின்னர் வெளியே வந்த ராகுல் காந்தி செய்தியாளர்களுடன் பேசுகையில்,

"இஸ்ரேல் - ஈரான் போரால் ஏற்பட்டுள்ள மேற்காசிய நெருக்கடி எவ்வளவு பெரிய இழப்பை ஏற்படுத்தும்? ஒரு மாற்றத்தை நோக்கி போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இது நமது பொருளாதாரத்திற்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும். இன்று பங்குச்சந்தை நிலவரத்தை நீங்கள் பார்த்தீர்கள். பிரதமர் மோடி அமெரிக்காவுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். இந்தியா பெரும் பாதிப்பைச் சந்திக்கப் போகிறது. அப்படியிருக்க அதைப்பற்றி விவாதிப்பதில் அவர்களுக்கு என்ன பிரச்னை? அதன் பிறகு மற்ற பிரச்னைகள் குறித்து நாம் விவாதம் செய்யலாம்.

மேற்காசியப் போர் விவகாரம் முக்கியமானது இல்லையா? எரிபொருள் விலை மற்றும் பொருளாதாரச் சீரழிவு விவாதத்திற்கு முக்கியமான விஷயம் இல்லையா? இவை எல்லாம் பொதுப் பிரச்னைகள். இவற்றையே நாங்கள் முக்கியமானதாக நினைக்கிறோம். அதைப்பற்றி விவாதிக்க விரும்புகிறோம். ஆனால், மக்களின் பிரச்னைகள் பற்றி அவர்கள் விவாதிக்க விரும்பவில்லை. அப்படி செய்தால் பிரதமர் மோடியின் நிலைப்பாடு வெளியே தெரிந்துவிடும். அமெரிக்காவால் பிரதமர் மோடி எப்படி சமரசம் செய்யப்படுகிறார், எப்படி மிரட்டப்படுகிறார் என்பது குறித்து விவாதம் நடைபெறும். அதனால்தான் பாஜகவினர் இதைப்பற்றி விவாதிக்க மறுக்கிறார்கள்.

பிரதமர் எப்படி நாடாளுமன்றத்தைவிட்டு ஓடினார் என்பதை நீங்கள் பார்த்தீர்கள். அவரால் திரும்பி வர முடியாது" என்று கூறினார்.

Summary

PM Modi will not be able to come to parliament: Rahul gandhi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.