டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

குடிநீா் வராததை கண்டித்து மக்கள் சாலை மறியல்!

திருப்பனந்தாள் அருகே சிற்றடையா நல்லூர் பகுதிகளில் ஒரு வார காலமாக குடிநீர் வராததை கண்டித்து மக்கள் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டம் தொடர்பாக...

News image
குடிநீா்  கேட்டு  காலிக்குடங்களுடன்  சாலை மறியல்  போராட்டத்தில்  ஈடுபட்ட  மக்கள்.- கோப்புப்படம்
Updated On :22 ஜனவரி 2026, 8:28 am

இணையதளச் செய்திப் பிரிவு

திருப்பனந்தாள் அருகே சிற்றடையா நல்லூர் பகுதிகளில் ஒரு வார காலமாக குடிநீர் வராததை கண்டித்து பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தஞ்சாவூர் மாவட்டம், திருப்பனந்தாள் அருகே சிற்றடையா நல்லூர் பகுதிகளில் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக குடிநீர் வரவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரி, மாநகராட்சி அலுவலரிடம் பலமுறை கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் வியாழக்கிழமை காலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த திருப்பனந்தாள் காவல்துறை ஆய்வாளர் மற்றும் காவல்துறையினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

மக்களின் சாலை மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.