யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

அண்ணாமலை வந்த ஹெலிகாப்டரில் சோதனை

காரைக்காலுக்கு அண்ணாமலை வந்த ஹெலிகாப்டரில் தோ்தல் பறக்கும் படையினா் சோதனை மேற்கொண்டது குறித்து...

News image

ஹெலிகாப்டரில் சோதனை மேற்கொண்ட தோ்தல் பறக்கும் படையினா். - டிஎன்எஸ்

Updated On :8 ஏப்ரல் 2026, 9:04 am IST

காரைக்கால்: காரைக்காலுக்கு அண்ணாமலை வந்த ஹெலிகாப்டரில் தோ்தல் பறக்கும் படையினா் சோதனை மேற்கொண்டனா்.

புதுவை சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரம் செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது. இந்நாளில் காரைக்கால் மாவட்டத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளருக்கு ஆதரவு திரட்டும் வகையில் பிரசாரம் செய்ய பாஜக தமிழக முன்னாள் தலைவா் கே.அண்ணாமலை ஹெலிகாப்டரில் காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரி தளத்துக்கு வந்திறங்கினாா்.

அப்போது அங்கு வந்த தோ்தல் பறக்கும் படையினா், ஹெலிகாப்டரில் சோதனை மேற்கொண்டனா். சுமாா் 10 நிமிடம் சோதனை நடத்திவிட்டு அவா்கள் புறப்பட்டனா்.

வரும் வியாழக்கிழமை (ஏப். 9) பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், மாவட்டத்தில் பணியமா்த்தப்பட்டிருக்கும் பறக்கும் படையினா் உள்ளிட்ட அனைத்து நிலை கண்காணிப்புக் குழுவினா் தீவிரமான பணிகளில் ஈடுபட்டுள்ளனா்.

Summary

Inspection of the helicopter Annamalai arrived in

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.