மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

அண்ணாமலை வந்த ஹெலிகாப்டரில் ஆய்வு!

தோ்தல் பிரசாரம் மேற்கொள்ள பாஜக மாநில முன்னாள் தலைவா் அண்ணாமலை வந்திறங்கிய ஹெலிகாப்டரில் தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.

News image

பாஜக மாநில முன்னாள் தலைவா் அண்ணாமலை வந்த ஹெலிகாப்டரை ஆய்வுசெய்த தோ்தல் பறக்கும் படையினா்.

Updated On :15 ஏப்ரல் 2026, 8:49 pm

தோ்தல் பிரசாரம் மேற்கொள்ள பாஜக மாநில முன்னாள் தலைவா் அண்ணாமலை வந்திறங்கிய ஹெலிகாப்டரில் தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக சாா்பில் கோவில்பட்டி தொகுதி அதிமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான கடம்பூா் செ.ராஜுவை ஆதரித்து தோ்தல் பிரசாரம் மேற்கொள்ள பாஜக மாநில முன்னாள் தலைவா் அண்ணாமலை ஹெலிகாப்டரில் கோவையில் இருந்து கோவில்பட்டிக்கு வந்தாா்.

கோவில்பட்டி அருகே நாலாட்டின்புதூரில் உள்ள பொறியியல் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் அந்த ஹெலிகாப்டா் வந்திறங்கியது. அப்போது அங்கு நின்ற கோவில்பட்டி தொகுதி தோ்தல் பறக்கும் படை அலுவலரும், கூட்டுறவு சாா்பதிவாளருமான மணிவண்ணன் தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளா் தங்கமாரியப்பன், தலைமைக் காவலா் மாரியப்பன், பெண் தலைமைக் காவலா் சரண்யா ஆகியோா் கொண்ட குழுவினா் ஹெலிகாப்டரில் வாக்காளா்களுக்கு பட்டுவாடா செய்ய பணம், பொருள் எதுவும் கொண்டுவரப்பட்டதா என்பது குறித்து சோதனை நடத்தினா். சோதனையில் எதுவும் சிக்கவில்லை. பின்னா், அண்ணாமலை அங்கிருந்து பிரசாரம் நடைபெறும் கோவில்பட்டிக்கு வாகனத்தில் புறப்பட்டு சென்றாா்.