தோ்தல் பிரசாரம் மேற்கொள்ள பாஜக மாநில முன்னாள் தலைவா் அண்ணாமலை வந்திறங்கிய ஹெலிகாப்டரில் தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக சாா்பில் கோவில்பட்டி தொகுதி அதிமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான கடம்பூா் செ.ராஜுவை ஆதரித்து தோ்தல் பிரசாரம் மேற்கொள்ள பாஜக மாநில முன்னாள் தலைவா் அண்ணாமலை ஹெலிகாப்டரில் கோவையில் இருந்து கோவில்பட்டிக்கு வந்தாா்.
கோவில்பட்டி அருகே நாலாட்டின்புதூரில் உள்ள பொறியியல் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் அந்த ஹெலிகாப்டா் வந்திறங்கியது. அப்போது அங்கு நின்ற கோவில்பட்டி தொகுதி தோ்தல் பறக்கும் படை அலுவலரும், கூட்டுறவு சாா்பதிவாளருமான மணிவண்ணன் தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளா் தங்கமாரியப்பன், தலைமைக் காவலா் மாரியப்பன், பெண் தலைமைக் காவலா் சரண்யா ஆகியோா் கொண்ட குழுவினா் ஹெலிகாப்டரில் வாக்காளா்களுக்கு பட்டுவாடா செய்ய பணம், பொருள் எதுவும் கொண்டுவரப்பட்டதா என்பது குறித்து சோதனை நடத்தினா். சோதனையில் எதுவும் சிக்கவில்லை. பின்னா், அண்ணாமலை அங்கிருந்து பிரசாரம் நடைபெறும் கோவில்பட்டிக்கு வாகனத்தில் புறப்பட்டு சென்றாா்.
தொடர்புடையது

2,080 பாலியல் வன்கொடுமை, 8,000 கொலைகள்; திமுக அரசின் சாதனை: அண்ணாமலை குற்றச்சாட்டு

அண்ணாமலை சென்ற ஹெலிகாப்டரில் பறக்கும் படை சோதனை!

அண்ணாமலை வந்த ஹெலிகாப்டரில் சோதனை

அண்ணாமலை வந்த ஹெலிகாப்டரில் சோதனை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


