மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

வெள்ளியங்கிரியில் மலை ஏறிய கல்லூரி மாணவர் மயங்கிவிழுந்து பலி!

கோவையில் வெள்ளியங்கிரி மலை எறிய இளைஞர் மயங்கிவிழுந்து பலியான சம்பவம் குறித்து...

News image

வெள்ளியங்கிரியில் மலை ஏறிய இளைஞர் மயங்கிவிழுந்து பலி - கோப்புப்படம்

Updated On :3 ஏப்ரல் 2026, 3:41 am

கோவையில் வெள்ளியங்கிரி மலை எறிய தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் மயங்கிவிழுந்து பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தென் கைலாயம் எனப் பக்தர்களால் போற்றப்படும் கோவை வெள்ளியங்கிரி சிவன் கோயிலுக்கு ஏழு மலையலைக் கடந்து சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இதற்காக வெள்ளியங்கிரி மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு வனத்துறையினர் அனுமதி அளித்து உள்ளனர்.

வெள்ளியங்கிரியில் மலை எறியபோது மயங்கிவிழுந்து பலியான தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் முகேஷ் குமார் (23).

வெள்ளியங்கிரியில் மலை எறியபோது மயங்கிவிழுந்து பலியான தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் முகேஷ் குமார் (23). - டிஎன்எஸ்

இந்த நிலையில், தர்மபுரி மாவட்டம், பீடம்நேரியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரின் மகன் முகேஷ் குமார் (23), கோவையில் உள்ள சேரன் கல்லூரியில் பார்மஸி ஐந்தாம் ஆண்டு பயின்று வந்தார். தெலுங்குபாளையம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி பயின்று வந்தவர், தனது நண்பர்களுடன் வியாழக்கிழமை இரவு சுமார் பத்து மணிக்கு வெள்ளிங்கிரிக்கு வந்துள்ளார்.

அங்கிருந்து சிவன் கோயிலுக்கு செல்வதற்காக அபி மற்றும் மகேந்திரன் உள்ளிட்ட எட்டு நண்பர்களுடன் 5 ஆவது மலையில் ஏறியுள்ளார். வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் திடீரென நெஞ்சு வலியால் துடித்தவர் கண் இமைக்கும் நேரத்தில் மயங்கி கீழே விழுந்துள்ளார். உடன் இருந்த அவரது நண்பர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். உடனடி மருத்துவ உதவி கிடைக்காத சூழலில், அவர் அங்கேயே உயிரிழந்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கோயில் நிர்வாகம் மற்றும் டோலி பாரம் தூக்கும் பணியாளர்கள், கடும் சிரமத்திற்கு இடையே முகேஷ் குமாரை அடிவாரத்திற்குக் கொண்டு வந்தனர். பின்னர் அவர் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவம் குறித்து முகேஷ் குமாரின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த துயர சம்பவம் மலையேற்றப் பிரியர்கள் மற்றும் சக மாணவர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Young Man Collapses and Dies While Climbing Velliangiri Hill

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.