2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

நிறைவடைகிறது பாக்கியலட்சுமி தொடர்!

பாக்கியலட்சுமி தொடர் நிறைவடைவது தொடர்பாக....

News image
Updated On :24 பிப்ரவரி 2025, 10:59 am

DIN

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் விரைவில் நிறைவடைகிறது.

கணவரால் ஏமாற்றப்பட்டு கைவிடப்படும் பெண், தன்னுடைய உழைப்பினால் எப்படி சுயமாக முன்னேறுகிறாள் என்பதை மையமாகக் கொண்டு இத்தொடர் எடுக்கப்பட்டு வருகிறது.

இளைய தலைமுறை ரசிகர்களும் விரும்பிப் பார்க்கும் தொடராக பாக்கியலட்சுமி தொடர் உள்ளது. இத்தொடர் டிஆர்பியிலும் முன்னிலையில் உள்ளது.

பாக்கியலட்சுமி தொடர் கடந்த 2020ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் நிலையில், இத்தொடர் விரைவில் நிறைவடையவுள்ளதாக கோபி பாத்திரத்தில் நடிக்கும் சதீஷ் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் சூசகமாக தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டப் பதிவில், “பாக்கியலட்சிமி என்ற பொதுத்தேர்வு முடியும் நேரம் வந்துவிட்டது. நான் தேர்ச்சியடைந்தேனா? இல்லை தோல்வியடைந்தேனா? என்பது ரசிகர்கள் என்ற உங்கள் கையில் இருக்கின்றது. மனதிலும் உடலிலும் சோர்வடைந்து விட்டேன்.

இருப்பினும் முயற்சி தொடரும். நல்ல நடிகன் என்ற இலக்கை அடைய இன்னும் என் பயணம் தொடரும். நன்றி. வாழ்த்துகள்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் சதீஷ் வெளியிட்டுள்ளப் பதிவின்படி பாக்கியலட்சுமி தொடர் விரைவில் நிறைவடையவுள்ளதாகத் தெரிகிறது. இத்தொடரின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் தகவல் தெரியவந்துள்ளது.

கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்கு மேல் பாக்கியலட்சுமி தொடர் ஒளிபரப்பாகி வரும் நிலையில், இத்தொடர் விரைவில் நிறைவடையவுள்ளது ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.