பண்டிதர் அயோத்திதாசர், தமிழைப் போற்றிய ஐரோப்பியரான வீரமாமுனிவர், மாமன்னன் பெரும்பிடுகு முத்தரையர், தாத்தா இரட்டைமலை சீனிவாசன், உத்தமத் தியாகி ஈஸ்வரன், ஐயா எல்.இளையபெருமாள், முன்னாள் அமைச்சர் சி.சுப்பிரமணியன், மாவீரன் பொல்லான், சர்.ஏ.டி.பன்னீர்செல்வம், எம்.கே.தியாகராஜபாகவதர், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமி ஆகியோர் பெயரிலும் இடஒதுக்கீட்டுப் போராட்டத்தில் உயிர் ஈந்த தியாகிகள் பெயரிலுமாக இதுவரை 20 நினைவு மண்டபங்கள் - அரங்குகள் அமைக்கப்பட்டிருப்பதுடன், வெள்ளையரை எதிர்த்த வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள், வீரமங்கை குயிலி, வாளுக்கு வேலி அம்பலம், கப்பலோட்டிய தமிழர் வ.உசிதம்பரானார், தமிழ்நாட்டின் பெருமைக்குரிய டாக்டர் ப.சுப்பராயன், முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம், நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை, மூவலூர் இராமாமிர்தம் அம்மையார், டாக்டர் முத்துலட்சுமி ஆகியோர் உள்ளிட்ட 29 பேருக்குத் திருவுருவச் சிலைகைள் அமைக்கப்பட்டு அவர்களின் புகழ்போற்றும் அரசாகத் திராவிட மாடல் அரசு செயலாற்றி வருகிறது.