மனசாட்சியை தொட்டு சொல்லுங்க, அன்புமணிக்கு நான் கொடுக்கவில்லை... எம்.பி. பதவி, மத்திய அமைச்சர் பதவி, தேர்தலில் தோற்ற பிறகும் ராஜ்யசபா எம்.பி. என எல்லாமே கொடுத்தோம். ஆனால், பொறுப்பு வந்தா மட்டும் போதாது, பொறுப்புணர்ச்சியும் வேணும். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என சொல்வது மாதிரி, அன்புமணி தன்னோட பொறுப்பை சரியா செயல்படுத்தவில்லை என்பதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன். அவர் நாடாளுமன்றத்துக்கு சென்ற வருகைப் பதிவை பாருங்கள். தேசிய சராசரி வருகைப் பதிவேட்டில் மற்ற எம்.பி.க்கள் வருகை 79 சதவீதமாக இருக்கிறபோது, அன்புமணி வருகை வெறும் 30 சதவீதம் தான். அதாவது பாதிக்கூட இல்லை. அதேபோல விவாதங்கள் நடைபெறும்போது சராசரியாக 79 விவாதங்களில் பங்கேற்றிருக்கிறார். ஆனால் அன்புமணி 7 விவாதங்களில்தான் பங்கேற்றிருக்கிறார். எனக்கு இதையெல்லாம் பார்க்கிறபோது மனது வலிக்கிறது. அவமானமாக இருக்கிறது. ஒருவரை நம்பி நாம் பொறுப்பு கொடுத்தால் மக்களுக்காக உழைக்கனும். ஆனால் அவர் வீட்டில் உட்கார்ந்து எப்படி எம்.பி. பதவியை வீண் செய்தாரோ, அதேமாதிரி கட்சியிலேயும் ஆயிரம் உதாரணம் இருக்கு. ஒழுங்கா களப்பணி செய்யவில்லை, தொண்டர்களைச் சந்திக்கவில்லை. இதுதான் உழைப்பா?, இல்லை இதுதான் மிதப்பா?