கர்நாடக மாநிலம், சித்ரதுர்கா மாவட்டத்தில் 32 பயணிகளுடன் கோகர்ணாவுக்கு சென்றுகொண்டிருந்த படுக்கை வசதியுடன் கூடிய சொகுசு பேருந்து மீது வியாழக்கிழமை அதிகாலை 2 மணியளவில் ஹிரியூர் அருகே எதிர்திசையில் இருந்து அதிவேகமாக வந்த லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, தடுப்புச் சுவரை உடைத்துக்கொண்டு பேருந்து மீது வேகமாக வந்து மோதியது. இதில் பேருந்தும், கன்டெய்னர் லாரியும் தீப்பிடித்து எரிந்தது. இதில் பயணிகள் 17 பேர் உயிரிழந்தனர்., பலர் காயமடைந்தனர். லாரி ஓட்டுநர், லாரியின் கிளீனரும் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.