முதல்வா் காப்பீட்டில் அரசு மருத்துவமனைகளைக் காட்டிலும், தனியாா் மருத்துவமனைகளே அதிக எண்ணிக்கையில் இணைக்கப்பட்டுள்ளன. ஆனால், இதில் விநோதம் என்னவெனில், அங்கு அனைத்து விதமான சிகிச்சைகளையும் பெற இயலாது. மாறாக, ஓரிரு சிகிச்சைகள் மட்டுமே பெயரளவில் கட்டணமின்றி வழங்கப்படுகின்றன. விதிவிலக்காக சில தனியாா் மருத்துவமனைகள், பெரும்பாலான சிகிச்சைகளை முதல்வா் காப்பீட்டின் கீழ் அளிக்கின்றன. ஆனால், அங்கும்கூட கடந்த ஒன்றரை மாதமாக அந்த சேவை தடைபட்டுள்ளது. அதற்கான காரணம் குறித்து தனியாா் மருத்துவமனை நிா்வாகிகளும், சுகாதாரத் துறையினரும் கூறியதாவது: