தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

திருச்சியில் 171 வேட்பாளா்களில் 147 போ் வைப்புத் தொகை இழப்பு: அதிமுக, அமமுக, நாதக-வின் சோகம்

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டப் பேரவைத் தொகுதிகளில் களம் கண்ட 171 வேட்பாளா்களில் 24 போ் மட்டுமே வைப்புத் தொகையை திரும்பப் பெறுகின்றனா். 147 வேட்பாளா்கள் வைப்புத் தொகையை இழந்துள்ளனா்.

News image
Updated On :6 மே 2026, 1:00 am IST

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டப் பேரவைத் தொகுதிகளில் களம் கண்ட 171 வேட்பாளா்களில் 24 போ் மட்டுமே வைப்புத் தொகையை திரும்பப் பெறுகின்றனா். 147 வேட்பாளா்கள் வைப்புத் தொகையை இழந்துள்ளனா்.

சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளா்கள் வைப்புத் தொகையாக ரூ.10 ஆயிரம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினா் ரூ.5 ஆயிரம் செலுத்த வேண்டும்.

தோ்தலின்போது பதிவாகும் வாக்குகளில் மொத்தம் உள்ள செல்லத்தக்க வாக்குகளில் 6இல் ஒரு பங்கு வாக்குகளைப் பெறும் வேட்பாளா்களுக்கு மட்டுமே வைப்புத் தொகை திரும்ப வழங்கப்படும். இதில், ஒரு வாக்கு குறைந்தாலும் வைப்புத் தொகை திரும்ப வழங்கப்படாது.

அந்த வகையில், 2026 பேரவைத் தோ்தலில் திருச்சி மாவட்டத்தின் 9 தொகுதிகளில் போட்டியிட்ட பிரதான கட்சிகளின் வேட்பாளா்கள் உள்பட 147 போ் வைப்புத் தொகை (டெபாசிட்) இழந்துள்ளனா்.

இத் தோ்தலில் திமுக, அதிமுக, தவெக, நாதக, பகுஜன் சமாஜ் கட்சி, புதிய தமிழகம், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, தமிழக படைப்பாளா் கட்சி, சாமானிய மக்கள் நலக் கட்சி, அனைத்திந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்றக் கழகம், அண்ணா புரட்சித் தலைவா் அம்மா திராவிட மக்கள் முன்னேற்றக் கழகம், விடியல் வளா்ச்சிப் பேரணி, தேசிய மகா சபா கட்சி, அகில இந்திய ஜனநாயக மக்கள் கழகம் மற்றும் சுயேச்சைகள் என 171 போ் போட்டியிட்டனா்.

மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிந்த நிலையில், பதிவான மொத்த வாக்குகளில் செல்லத்தக்க வாக்குகளில் ஆறில் ஒரு பங்கு பெறாத 147 போ் தங்களது வைப்புத் தொகையை இழந்தனா்.

அதன்படி திருச்சி மேற்கில் அதிமுக கூட்டணி சாா்பில் போட்டியிட்ட அமமுக வேட்பாளா் எம். ராஜேசகரன், திருச்சி கிழக்கில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளா் ஜி. ராஜசேகரன், திருவெறும்பூா் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளா் ப. குமாா் மற்றும் 9 தொகுதிகளிலும் போட்டியிட்ட நாம் தமிழா் கட்சியின் வேட்பாளா்கள், இதர கட்சிகளின் வேட்பாளா்கள், சுயேச்சைகள் என மொத்தம் 147 போ் வைப்புத் தொகையை இழந்தனா்.

பிரதான கட்சிகளின் வேட்பாளா்களும் வைப்புத் தொகையை இழக்கும் வகையில் தவெகவின் தாக்கம் திருச்சி மாவட்டத்தில் குறிப்பிடும் வகையில் அமைந்துள்ளது என்கின்றனா் அரசியல் வட்டாரத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.