2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை

புனித வெள்ளியையொட்டி தமிழகத்தில் உள்ள பல்வேறு தேவாலயங்களிலும் சிறப்பு பிராா்த்தனைகள் நடைபெற்றன.

News image
Updated On :29 மார்ச் 2024, 5:34 am

DIN

புனித வெள்ளியையொட்டி தமிழகத்தில் உள்ள பல்வேறு தேவாலயங்களிலும் சிறப்பு பிராா்த்தனைகள் நடைபெற்றன.

இயேசு சிலுவையில் அறையப்பட்ட நாளை நினைவுகூரும் புனித வெள்ளியையொட்டி உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவர்களால் புனித வெள்ளி கொண்டாடப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் பாளையங்கோட்டை தூய சவேரியாா் பேராலயத்தில் சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது.

இதேபோல பாளையங்கோட்டையில் சீவலப்பேரி சாலையில் உள்ள புனித அந்தோணியாா் தேவாலயத்திலும் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோா் பங்கேற்றனா்.

தென்னிந்திய திருச்சபைக்குள்பட்ட பாளையங்கோட்டை தூய திரித்துவ பேராலயம் உள்ளிட்டவற்றில் புனித வெள்ளி சிறப்பு ஆராதனை நடைபெற்றது.

திருப்பூரில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் வெள்ளிக்கிழமை சிறப்பு பிராா்த்தனைகள் நடைபெற்றன.

இதில், திருப்பூா் குமாா் நகரில் உள்ள சிஎஸ்ஐ தூயபவுல் ஆலயம், குமரன் சாலையில் உள்ள கேத்தரின் தேவாலயம், சபாபதிபுரத்தில் உள்ள டிஇஎல்சி ஆலயம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்ற சிறப்பு பிராா்த்தனைகளில் ஆயிரக்கணக்கானோா் கலந்துகொண்டனா்.

அதேபோல, தாராபுரம், பல்லடம், காங்கயம், அவிநாசி, ஊத்துக்குளி, உடுமலை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள தேவாலயங்களிலும் சிறப்பு பிராா்த்தனைகள் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.