ஆம்பூர் அருகே அனுமதியின்றி நிலத்தில் நாட்டு துப்பாக்கியைப் பதுக்கிவைத்திருந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த வெங்கடசமுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட ராளகொத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி மஞ்சுளா தம்பதியினர்.
இவர்கள் கடந்த ஒன்றாம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த ராமமூர்த்தி என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் தங்களது பசுமாட்டை
மேய்ச்சலுக்கு விடப்பட்டிருந்தனர். அப்போது வயலில் பதுக்கி வைத்திருந்த நாட்டு வெடிகுண்டு வெடித்து பசுமாட்டின் வாய் மற்றும் தாடை பகுதி கிழிந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.
இது குறித்து உமராபாத் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில், குப்புராஜாபாளையம் பகுதியைச் சேர்ந்த சதீஷ் (24) மற்றும் அங்கியாபள்ளி பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதில், வனவிலங்குகளை வேட்டையாட வைக்கப்பட்ட நாட்டு வெடிகுண்டு வெடித்து மேய்ச்சலுக்கு விடப்பட்டிருந்த பசுமாடு வாய் மற்றும் தாடை கிழிந்தது தெரியவந்தது.
மேலும் இவர்கள் விவசாய நிலத்தில் அனுமதியின்றி நாட்டுத் துப்பாக்கி பதுக்கி வைத்து வனவிலங்குகளைவேட்டையாடி வருவதும் விசாரணையில் தெரியவந்தது.
இது தொடர்பாக மேலும் இருவர் மீதும் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
அவர்களிடமிருந்து நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்து உமராபாத் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சட்டவிரோத மது விற்பனை: 4 போ் கைது

மேலப்பாளையத்தில் வன்கொடுமை வழக்கில் 3 போ் கைது

கூலித் தொழிலாளி போக்ஸோவில் கைது
நாட்டு வெடிகுண்டு வீசி தொழிலாளியை கொல்ல முயன்ற வழக்கு: மேலும் ஒருவா் கைது
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை



