தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

பிப்.26 இல் கருணாநிதி நினைவிடம் திறக்கப்படும்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை மெரினாவில் கட்டப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடங்கள் வரும் திங்கள்கிழமை (பிப்.26) மாலை 7 மணிக்கு திறக்கப்படும்.

News image
Updated On :22 பிப்ரவரி 2024, 5:22 am

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் கட்டப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் மற்றும் புதுப்பிக்கப்பட்ட பேரறிஞர் அண்ணா நினைவிடம் வரும் திங்கள்கிழமை(பிப்.26) மாலை 7 மணிக்கு திறக்கப்படவுள்ள நிலையில் பேரவை உறுப்பினர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.

சட்டப்பேரவை வியாழக்கிழமை காலை 10 மணிக்கு கூடியது. கேள்வி நேரம் நடைபெற்று வருகிறது.

இதில், கருணாநிதி, பேரறிஞர் அண்ணா நினைவிடம் திறப்பு விழா தொடர்பாக பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், சென்னை மெரினாவில் கட்டப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி நினைவிடம் வரும் திங்கள்கிழமை (பிப்.26) மாலை 7 மணிக்கு திறக்கப்படவுள்ளது.

அன்றைய நாளில் நம் தாய்த் தமிழ்நாட்டிற்கு “தமிழ்நாடு” என்று பெயர் சூட்டிய பேரறிஞர் பெருந்தகை அறிஞர் அண்ணா நினைவிடமும் புனரமைக்கப்பட்டு, புதுப்பிக்கப்பட்டிருக்கிறது; புதுப்பிக்கப்பட்டுள்ள பேரறிஞர் அண்ணாவின் நினைவிடமும் திறந்து வைக்கப்படவுள்ளன.

அந்த நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ்கள் அச்சிடப்படவில்லை. அதனை சிறப்பு விழாவாக கொண்டாடப்படவில்லை எனக் கூறி அந்த நிகழ்ச்சியிலே இந்த அவையில் இருக்கக்கூடிய ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி,கூட்டணிக் கட்சி, தோழமைக் கட்சி என எல்லாக் கட்சிகளைச் சார்ந்த உறுப்பினர்களும் பங்கேற்க வேண்டுமென்று அழைப்பு விடுத்தார் முதல்வர் ஸ்டாலின்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.