தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

சிறைத் தண்டனையை விட களங்கம் வேதனையானது: தில்லி நீதிமன்றம்

சிறைத் தண்டனையை விட களங்கம் வேதனையானது: தில்லி நீதிமன்றம்

News image

தில்லி உயர் நீதிமன்றம்​

Updated On :17 ஏப்ரல் 2024, 12:54 pm

புது தில்லி: சிறையை விட களங்கம் மிகுந்த வேதனையை ஏற்படுத்தும் என்று, சிறுமி பலாத்கார வழக்கில், ஒருவருக்கு பிறப்பித்த 5 ஆண்டுகால சிறைத் தண்டனை ரத்து செய்த தில்லி நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

சிறுமியை பலாத்காரம் செய்தவர் என்று தவறாக அடையாளம் காட்டப்படும் நபர், இந்த சமுதாயத்தில் களங்கத்துடன் வாழ்வது சிறைத் தண்டனையை விட வேதனையானது என்றும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

விசாரணை நீதிமன்றம், கடந்த 2023ஆம் ஆண்டு சிறுமி பலாத்கார வழக்கில் குற்றவாளி என்று அளித்த தீர்ப்பை எதிர்த்து தில்லி உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், அரசு தரப்பு சாட்சிகளில் குறைபாடுகள் இருப்பதாகவும் பாதிக்கப்பட்ட நபர் அளித்த சாட்சியில் நம்பகத்தன்மை இல்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்டவரின் சாட்சியம் நம்பகத்தன்மையற்றதாகவும் வழக்கு விசாரணையில் கடுமையான குறைபாடுகள் மற்றும் இடைவெளிகள் இருப்பதால், விசாரணை நீதிமன்றத்தால் எடுக்கப்பட்ட போக்சோ சட்டப் பிரிவு 29 மற்றும் 30-ன் கீழ் குற்றம் நடந்ததாகக் கருதுவது, மேல்முறையீட்டாளரை தண்டிக்க ஒரு அடிப்படையாக இருக்க முடியாது" என்று நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் தெரிவித்துள்ளது.

ஒரு தவறான தண்டனை, ஒரு தவறான விடுதலையை விட மோசமானது என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியிருக்கிறது.

சிறுமியை பலாத்காரம் செய்தவர் என்ற களங்கத்துடன் தொடர்ந்து இந்த சமூகத்தில் அவமானத்தை சந்திக்கிறார், இது கடும் விசாரணை மற்றும் கடுங்காவல் தண்டனையை விட வேதனையானது" என்று நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

இந்த வழக்கானது, கடந்த 2016ஆம் ஆண்டு பாதிக்கப்பட்ட 12 வயது சிறுமியை, அவரது வீட்டில், உறவினர் பலாத்காரம் செய்துவிட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில் விசாரணை நீதிமன்றம் குற்றவாளி என தீர்ப்பளிக்க, தில்லி நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது.

இந்த விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டிருப்பதை உயர் நீதிமன்றம் கவனித்துள்ளது. அதாவது, பாதிக்கப்பட்ட சிறுமியின் மாமா மற்றும் மாமிக்கு (மேல்முறையீட்டாளரின் சகோதரி) இடையேயான திருமண தகராறு காரணமாக முக்கியத்துவம் பெற்றதாகவும் குறிப்பிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.