நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

நங்கவள்ளியில் மின்சாரம் பாய்ந்து மின்வாரிய அலுவலர் பலி

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள நங்கவள்ளியில் மின்சாரம் பாய்ந்து மின்வாரிய அலுவலர் உயிரிழந்தார். 

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:44 pm

கு. இராசசேகரன்

மேட்டூர்: சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள நங்கவள்ளியில் மின்சாரம் பாய்ந்து மின்வாரிய அலுவலர் உயிரிழந்தார். 

மேட்டூர் அருகே உள்ள கோனூர் காமராஜ் நகரைச் சேர்ந்தவர் மன்னாதன்(55). நங்கவள்ளி மின்வாரிய அலுவலகத்தில் கம்பி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். இன்று (செவ்வாய்கிழமை) மாலை  பெரிய சோரகை கிராமம் குட்டிகரடு என்ற இடத்தில் உள்ள டிரான்ஸ்பார்மரில் பழுது ஏற்பட்டது. 

பழுதை சரிசெய்ய டிரான்ஸ்பார்மர் மீது ஏறிய மன்னாதன் மின்சார இணைப்பை துண்டிக்காமலே பணி செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து நங்கவள்ளி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.