அதனைத்தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சியினர், பொதுநல அமைப்பினர் நூற்றுக்கணக்கானோர் புத்தாநத்தம் பகுதியிலிருந்து புறப்பட்டு புதிதாக திறக்கப்பட்ட மதுக்கடையை முற்றுகையிட பேரணியாக வந்த நிலையில், அவர்களை போலீஸார் வழியிலேயே தடுத்து நிறுத்தி சமரசம் செய்தனர். இருப்பினும் பொதுமக்கள், போலீஸாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வருவாய் வட்டாட்சியர் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி, மாற்று இடத்தில் கடையை திறக்க வேண்டும் என வலியுறுத்தியதால், புதிய மதுக்கடை திறந்து 2 மணி நேரத்தில் பொதுமக்கள் எதிர்ப்பால் மூடப்பட்டது. அதனைத்தொடர்ந்து போரட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.