குளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

தெலங்கானாவில் 27 சதவிகித மக்கள் எழுத்தறிவற்றவர்கள்

புதிய மாநிலமான தெலங்கானாவில் சுமார் 27 சதவிகித மக்கள் எழுத்தறிவற்றவர்கள்.  இந்த நிலையை மாற்றி நூறு சதவிகிதம் எழுத்தறிவு பெற்ற மாநிலமாக்க வேண்டும் என்று முதல்வர் கே. சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 3:18 pm

ENS

எக்ஸ்பிரஸ் செய்திச் சேவை

ஹைதராபாத்: புதிய மாநிலமான தெலங்கானாவில் சுமார் 27 சதவிகித மக்கள் எழுத்தறிவற்றவர்கள்.

இந்த நிலையை மாற்றி நூறு சதவிகிதம் எழுத்தறிவு பெற்ற மாநிலமாக்க வேண்டும் என்று முதல்வர் கே. சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது அதிகளவில் எழுத்தறிவற்றவர்கள் இருக்கும் மாநிலங்களில் ஆந்திரம், பிகாருக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் இருக்கிறது தெலங்கானா.

அண்மையில் வெளியிடப்பட்ட, 2017-18 ஆம் ஆண்டுக்கான வீட்டுபயோகப் பொருள் பயன்பாட்டு அறிக்கையில் இந்தத் தகவலைப் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தெலங்கானா மக்கள்தொகையில் கல்வியறிவு பெற்றவர்கள் 72.8 சதவிகிதத்தினர். மற்றவர்கள், சுமார் 27 சதவிகிதத்தினர் எழுத்தறிவற்றோர். நகர்ப்புறங்களைவிட கிராமப்புறங்களில் நிலைமை மிகவும் மோசம், எழுத்தறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை 23 சதவிகிதம் குறைவாக இருக்கிறது.  ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையேயும் 20 சதவிகிதம் வித்தியாசம் இருக்கிறது.

எளிதான செய்தியொன்றை ஏதேனுமொரு மொழியில் எழுதவும் படிக்கவும் புரிந்துகொள்ளவும் முடிந்தவர்கள் எழுத்தறிவு பெற்றவர்களாக அரசின் தேசிய கணக்கெடுப்புத் துறை வரையறுத்துள்ளது. 

நூறு சதவிகித முனைப்பில் ஒருவர், ஒருவருக்குக் கற்றுத் தர வேண்டும் என்று முதல்வர் சந்திரசேகர ராவ் கேட்டுக்கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.