ஆம் ஆத்மியில் இருந்து மேலும் சில தலைவர்கள் விலகுவார்கள்: பாஜகவில் இணைந்த எம்.பி. ஸ்வாதி மாலிவால்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்புவருகிறது புதிய ரியல்மி சி100எக்ஸ்! எப்போது அறிமுகம்?எச்-1பி விசாவுக்கு 3 ஆண்டுகள் தடை? டிரம்ப் அரசு புதிய மசோதா!திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்!
/

தெலங்கானாவில் 27 சதவிகித மக்கள் எழுத்தறிவற்றவர்கள்

புதிய மாநிலமான தெலங்கானாவில் சுமார் 27 சதவிகித மக்கள் எழுத்தறிவற்றவர்கள்.  இந்த நிலையை மாற்றி நூறு சதவிகிதம் எழுத்தறிவு பெற்ற மாநிலமாக்க வேண்டும் என்று முதல்வர் கே. சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :1 ஜனவரி 2020, 5:34 pm

எக்ஸ்பிரஸ் செய்திச் சேவை

ஹைதராபாத்: புதிய மாநிலமான தெலங்கானாவில் சுமார் 27 சதவிகித மக்கள் எழுத்தறிவற்றவர்கள்.

இந்த நிலையை மாற்றி நூறு சதவிகிதம் எழுத்தறிவு பெற்ற மாநிலமாக்க வேண்டும் என்று முதல்வர் கே. சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது அதிகளவில் எழுத்தறிவற்றவர்கள் இருக்கும் மாநிலங்களில் ஆந்திரம், பிகாருக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் இருக்கிறது தெலங்கானா.

அண்மையில் வெளியிடப்பட்ட, 2017-18 ஆம் ஆண்டுக்கான வீட்டுபயோகப் பொருள் பயன்பாட்டு அறிக்கையில் இந்தத் தகவலைப் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தெலங்கானா மக்கள்தொகையில் கல்வியறிவு பெற்றவர்கள் 72.8 சதவிகிதத்தினர். மற்றவர்கள், சுமார் 27 சதவிகிதத்தினர் எழுத்தறிவற்றோர். நகர்ப்புறங்களைவிட கிராமப்புறங்களில் நிலைமை மிகவும் மோசம், எழுத்தறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை 23 சதவிகிதம் குறைவாக இருக்கிறது.  ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையேயும் 20 சதவிகிதம் வித்தியாசம் இருக்கிறது.

எளிதான செய்தியொன்றை ஏதேனுமொரு மொழியில் எழுதவும் படிக்கவும் புரிந்துகொள்ளவும் முடிந்தவர்கள் எழுத்தறிவு பெற்றவர்களாக அரசின் தேசிய கணக்கெடுப்புத் துறை வரையறுத்துள்ளது. 

நூறு சதவிகித முனைப்பில் ஒருவர், ஒருவருக்குக் கற்றுத் தர வேண்டும் என்று முதல்வர் சந்திரசேகர ராவ் கேட்டுக்கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.