சங்ககிரி மலை மீது உள்ள அருள்மிகு சென்னகேசவப் பெருமாள் சித்திரை திருவிழா வழக்கம் போல் ஏப்ரல் 28ஆம் தேதி செவ்வாய்க்கிழமை சுவாமி மலையிலிருந்து நகருக்குள் எழுந்தருள வேண்டும். அன்றிரவு முதல் நாள் அன்னபட்சி வாகனத்திலும், 2ஆம் நாள் சிங்க வாகனத்திலும், 3ஆம் நாள் அனுமந்தன் வாகனத்திலும், 4ஆம் நாள் கருட வாகனத்திலும், 5ஆம் நாள் சேஷ வாகனத்திலும், 6ஆம் நாள் யானைவாகனத்திலும், 7ஆம் நாள் திருக்கல்யாண உற்சவமும் மற்றும் புஷ்ப வாகனத்திலும், 8ஆம் நாள் குதிரை உள்ளிட்ட வாகனத்தில் சுவாமி மாலை நகரின் முக்கிய வீதிகளின் வழியாக உலா வருதல் நிகழ்ச்சிகளும், 9ஆம் நாள் மே 6ஆம் தேதி அருள்மிகு ஆஞ்நேயர் சுவாமி அமர்ந்து செல்லும் சிறிய தேரும், அருள்மிகு சென்னகேசவப் பெருமாள் உடனமர் ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவி சுவாமிகள் அமர்ந்து செல்லும் பெரியதேர் வடம் பிடித்தலும் நடைபெற வேண்டும்.