ஆயினும் இப்போது மீண்டும் கர்நாடக அரசு போக்குவரத்துத் துறை மேற்கண்ட நிறுவனங்களின் வாகன சேவைகளுக்கு பெங்களூரு நகருக்குள் தடை விதித்திருப்பதை ஒட்டிய கேள்விக்கு பதிலளிக்கையில் ஓலா நிர்வாகம் தெரிவித்திருப்பது என்னவென்றால்... இந்த பிரச்னை குறித்து தாங்கள் தீவிர ஆலோசனையில் இருப்பதாகவும், தங்களது அதிகாரிகளுடன் கலந்து பேசி அரசு போக்குவரத்துத் துறையின் அனைத்து கேள்விகளுக்கும், ஐயங்களுக்கும் சமரசமான முறையில் பதில் காணப்படும் என்றும் "கர்நாடக மாநிலத்தில் நூறாயிரக்கணக்கான ஓட்டுநர் பங்காளிகள் தொடர்ந்து பணியாற்றுவதற்கும், மக்களின் போக்குவரத்துத் தேவைகளுக்கு நிறைவேற்ற சேவை செய்வதற்கும் ஒரு இணக்கமான தீர்வைக் கண்டுபிடிப்பதற்கான அனைத்து விருப்பங்களையும் நாங்கள் மதிப்பீடு செய்து கொண்டிருக்கிறோம் என்று ஓலா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.