மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்ட ஊடகவியலாளர்!

மும்பையில் தொலைக்காட்சி ஊடகவியலாளராக செயல்பட்டு வருபவர் ஹெர்மன் கோம்ஸ்.

News image
Updated On :14 அக்டோபர் 2018, 11:28 am

மும்பையில் தொலைக்காட்சி ஊடகவியலாளராக செயல்பட்டு வருபவர் ஹெர்மன் கோம்ஸ். ஹெர்மன் மற்றும் அவரது நண்பரை ஞாயிறு அதிகாலை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கடுமையாகத் தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர். 

இந்தத் தாக்குதல் பற்றி ஹெர்மன் கோம்ஸ் பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், 'வேலை முடித்து சனிக்கிழமை நள்ளிரவு டாக்ஸியில் கம்தேவி பகுதியிலுள்ள எனது வீட்டுக்குத் திரும்பி கொண்டிருந்தேன். கார்லிலிருந்து 1.30 மணிக்கு கீழே இறங்கி வீட்டுக்கு போன போது அங்கு என்னை அடையாளம் தெரியாத நான்கைந்து மர்ம நபர்கள்,  என் வீட்டின் வெளிப்புறத்தில் வைத்து தாக்கினார்கள். இதன் காரணமாக என் வலது கண்ணில் காயம் ஏற்பட்டுள்ளது, சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறேன்’ என்றார்.

மேலும் அவர் கூறுகையில், ‘இந்தத் தாக்குதல் சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்டது. என்னை மட்டுமின்றி என் நண்பரையும் சேர்த்து அந்த மர்ம நபர்கள் தாக்கினார்கள். மேலும், எங்களிடமிருந்து செல்போனை பறித்துச் சென்றனர் என்றார். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஹெர்மன் கோம்ஸ் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு பத்திரிகையாளர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து ஹெர்மன் கோம்ஸ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் விரிவாகக் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.