இதை மறுத்த பள்ளி நிர்வாகத் தரப்பு, பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ள அந்த இரு ஆசிரியர்களுள் ஒருவர் பெண், என்பதோடு சம்பந்தப்பட்ட இரு ஆசிரியர்களுமே தங்களது பள்ளியில் 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரிபவர்கள், அவர்கள் மேல் இப்படியொரு குற்றச்சாட்டு இதுவரை வந்ததில்லை. என்பதால் பெற்றோரின் குற்றச்சாட்டு ஆதரமற்றது என்றும் கூறியிருந்தது. அதுமட்டுமல்ல, மாணவியின் பெற்றோர் குறிப்பிட்டுள்ளவாறு அந்த மாணவி தேர்வில் தோல்வியுற்றவர் அல்ல என்றும் மாணவிக்கு தோல்வியுற்ற பாடங்களில் மீண்டும் தேர்வெழுதி வெல்ல மார்ச் 23 ஆம் தேதி நிர்மாணிக்கப்பட்டுருந்தது, அன்று தேர்வெழுதி இருந்தால் மாணவி தோல்வியடைந்தவராகக் கருத வாய்ப்பில்லை. அவர் மீண்டும் தேர்வில் வெற்றி பெற்று அடுத்த வகுப்புக்குச் செல்ல முடியும். அப்படியிருக்க ஆசிரியர்களின் சதியால் தேர்வில் தோல்வியுற்று மாணவி தற்கொலை செய்து கொண்டார் என்பதை எங்களால் ஒப்புக் கொள்ள முடியாது என்றும் பள்ளி நிர்வாகம் கூறியிருந்தது.