பதிவுத் திருமணமுறையில் இம்மாதிரியான கண்டிப்பான அணுகுமுறைகளை திருமணப் பதிவுத் துறை பின்பற்றுமானால் அது சாதி, அந்தஸ்து, பேதங்களை வன்மையாகக் கண்டிக்கும் கலப்புத் திருமணங்கள், சாதி மறுப்புத் திருமணங்கள், சுயமரியாதைத் திருமணங்களுக்கு எதிரான அணுகுமுறையாகவே அமையும் என பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். மேலும் அவர் இது குறித்துப் பேசுகையில்; இந்து பதிவுத் திருமணங்களில் இம்மாதிரியான அணுகுமுறைகள் தொடர்ந்து பின்பற்றப்படுமாயின் நாடு சிறிது, சிறிதாக சாதியவாதிகளின், மதவாதிகளின் பிடியில் சிக்கிக் கொண்டிருக்கிறதோ என்ற அச்சத்தைத் தான் தருகிறது என்றும் குறிப்பிட்டார்.