இந்திய அரசியலைப் பொறுத்தவரை வட இந்திய அரசியல்வாதிகள், தென்னிந்திய அரசியல்வாதிகளை விட அரசியல் நாகரீகம் மிக்கவர்கள் என்று பல சமயங்களில் மீடியாக்களால் புகழப்படுவார்கள். காரணம் பாராளுமன்றத்தின் உள்ளேயோ அல்லது சட்டமன்றத்தின் உள்ளேயே அவர்களுக்குள் அரசியல் ரீதியாக ஆயிரம் தர்க்கங்களும், காரசாரமான விவாதங்களும் நடக்கும். கட்டிப் புரண்டு மல்லுக்கட்டாத குறையாக மோதிக் கொள்வார்கள். ஆனால், மக்கள் நிறைந்த சபை, பொது வெளி, விழாக்களில் ஒன்றாகப் பங்கேற்கும் சந்தர்பங்கள் அமையும் போதெல்லாம் குடும்ப நண்பர்களைப் போல நலம் விசாரிக்கத் தயங்க மாட்டார்கள். குறைந்த பட்சம் எப்பேர்ப்பட்ட அரசியல் எதிரிகள் என்றாலும் ஒரு புன்னகையாவது பரிமாறிக் கொள்வார்கள் என்று தான் இதுவரை நற்பெயர் எடுத்திருந்தார்கள்.