தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

கணவர் கைவிட்டதால் பங்களாதேஷ் ரயில்நிலையத்தில் குழந்தை பெற்ற இந்தியப் பெண்!

ரோக்‌ஷனாவின் கணவர் அப்துல், பங்களாதேஷில் பிறந்தவர் என்றாலும் வியாபார நிமித்தமாக இந்தியாவுக்கு வந்து தங்கியிருந்த காலத்தில் ரோக்‌ஷனாவுடன் காதல் ஏற்பட்டு அவரை மணந்து கொண்டிருந்தார்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 4:00 pm

RKV

பங்களாதேஷ், டாக்கா ரயில்நிலையத்தில் இந்தியப் பெண்ணொருவர் ரயில்நிலைய கழிவறையில் குழந்தை பெற்றார். ரோக்‌ஷனா அக்தர் எனும் 30 வயது இந்தியப் பெண் அந்நாட்டின் தலைநகர் டாக்கா ரயில்நிலையக் கழிவறையில் குழந்தை பெற்றார். இளம்பெண், கழிவறையில் குழந்தை பெற்றதைக் கண்ட ரயில்நிலைய ஊழியர்கள் விஷயத்தை கமலாபூர் ரயில் நிலையப் பொறுப்பாளரான யாசின் ஃபாரூக்கிடம் எடுத்துச் செல்ல திங்களன்று இரவு தாயும், சேயும் உடனடியாக அருகிலிருந்த முக்தா ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டனர். பின்பு அங்கிருந்து டாக்கா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இடம்பெயர்ந்தனர்.

ரோக்‌ஷனாவின் கணவர் அப்துல், பங்களாதேஷில் பிறந்தவர் என்றாலும் வியாபார நிமித்தமாக இந்தியாவுக்கு வந்து தங்கியிருந்த காலத்தில் ரோக்‌ஷனாவுடன் காதல் ஏற்பட்டு அவரை மணந்து கொண்டிருந்தார். திருமணத்திற்கு பின் மனைவியை பங்களாதேஷ் அழைத்துச் சென்ற அப்துல், அங்கு தனது சகோதரியின் இல்லத்தில் ரோக்‌ஷனாவைத் தங்க வைத்திருக்கிறார். ஆனால், என்ன காரணத்தாலோ சில நாட்களுக்கு முன்பு மனைவியின் பாஸ்போர்ட்டைத் திருடிக் கொண்டு காணாமல் போன அப்துல் அதன் பின் அவருடன் தொடர்பில் இல்லை எனத் தெரிகிறது. என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.