இதில் பரிதாபகரமான விஷயம் என்னவென்றால், ராஜேஷ் மாருவின் அம்மா காலாவின் தேற்ற முடியாத அழுகை. மகனது துர் மரணத்தைக் கேள்விப் பட்டதில் இருந்து அவருக்கும் உடல்நிலை மோசமாகி விட மருத்துவமனை சிகிச்சையிலிருப்பதாக தகவல். அது மட்டுமல்ல, அவர்களது குடும்பத்தைப் பொறுத்தவரை ராஜேஷுக்கு மூன்று சகோதரர்களும், மூன்று மூத்த சகோதரிகளும் இருப்பதாகக் கேள்வி. அவர்களுள் தனது இளைய மகனே தனது கஷ்டங்களைப் புரிந்து கொண்டு குடும்பத்தின் மீதி மிகுந்த பற்று கொண்டு தன் மீது மிகுந்த பாசத்துடன் இருக்கக் கூடியவர். அவர் ஒருவரை நம்பியே நானும் எனது மனைவியும் வாழ்ந்து வந்தோம். இனி எங்கள் மகனுக்கு நாங்கள் எங்கே போவோம்’ அவனுக்கு திருமணத்திற்காகப் பெண் பார்க்கலாம் என்று கூறும் போதெல்லாம், வேண்டாம், இந்தச் சிறிய வீட்டில் வைத்து திருமணம் செய்து கொள்ள முடியாது. கொஞ்சம் பெரிதாக வீடு கட்டிக் கொண்டு பிறகு திருமணத்தைப் பற்றி யோசிக்கலாம் என்று தட்டிக் கழித்துக் கொண்டே இருந்தவன் சமீபகாலமாகத் தான் 32 வயதாகி விட்டதே என்று திருமணத்திற்கு வரன் பார்க்க ஒப்புக் கொண்டிருந்தான். அதற்குள் இப்படியாகி விட்டதே! நான் என்ன செய்வேன் என்று கதறி அழும் அவரது தாயாரைத் தேற்றுவார் யாருமில்லை.’