அது மட்டுமல்ல, கெளரி லங்கேஷ் கொலை விவகாரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். ஆரம்பத்தில்... கொலை நடந்த சமீபத்தில் கொலைக்கான காரணகர்த்தர்கள் ஆளும் பாஜக அரசின் கிளைக்கட்சியான ஆர்எஸ்எஸ் வெறியர்கள் தான் என அனைத்து ஊடகங்களும் குற்றம் சுமத்தின. ஆனால், தற்போது கொலைக்கான காரணம் சொந்தப் பகையாக இருக்குமோ என்ற ரீதியில் சென்று கொண்டிருக்கிறது. கெளரி லங்கேஷின் தந்தை தொடங்கிய பத்திரிகையை யார் உரிமை கொண்டாடுவது என்பது தொடர்பாக மூண்ட பகையின் காரணமாக நிகழ்ந்த கொலையாக இருக்கலாம் என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன, அதனடிப்படையில் விசாரணை சென்று கொண்டிருக்கிறது. ஆனால், இந்த விஷயத்தைப் பொருத்தவரை ஊடகங்கள் என்ன செய்தன? கெளரி லங்கேஷ் கொலையுண்ட உடனேயே அதற்கான காரணம் பாஜகவைத் தவிர வேறு யாராகவும் இருக்க முடியாது என்பதாக அல்லவா நிறுவப் பார்த்தன! அப்படியான சூழலில் ஊடகங்களின் மீதான நம்பகத்தன்மை குறையாமல் என்ன செய்யும்?