நடு மரத்தில் ஆணி அடித்துப் பார்த்திருப்பீர்கள். ஆனால் இங்கே சீனாவில் நட்ட நடுச்சாலையில் ஒரு வீடே, ஆணி அடித்தாற் போல கடந்த 14 வருடங்களாக அசையாமல், அசைக்க முடியாமல் நின்று கொண்டிருந்து அரசாங்கத்தை வந்து பார் என கண்ணில் விரல் விட்டு ஆட்டாத குறையாக அடம் பிடித்து நீடித்திருந்திருக்கிறது. நம்மூரில் இப்படியெல்லாம் அனுமதிப்பார்களா என்ன? ஆளும், பேரும் தெரியாமல் வீட்டு ஓனரை அள்ளிக் கொண்டு வந்து மொத்தி, இடத்தை எழுதி வாங்கி ...வீட்டை இடித்து எப்போதோ அரசுக்குச் சொந்தமான இடமாக ஆக்கியிருப்பார்கள். ஆனால் அங்கே அதெல்லாம் சாத்தியப் பட்டிருக்கவில்லை.