ஹரியானாவில் பாலியல் வழக்கில் சிக்கி தற்போது 20 ஆண்டுகள் ஆயுள் தண்டனை பெற்றுள்ள தேரா சாச்சா செளதா சீக்கிய மடத்தின் தலைவரான ராம் ரஹீம், நீதிமன்ற விசாரணையின் போதும், குற்றத்திலிருந்து தப்பிக்கப் பல பொய்களை அவிழ்த்து விட்டுக் கொண்டிருந்தார். அவற்றில் ஒன்று தான், தனக்குத் தானே ஆண்மையற்றவர் என்று சூட்டிக் கொண்ட பட்டம். 1990 ஆம் ஆண்டிலிருந்து தனக்கு ஆண்மைக் குறைபாடு இருந்து வருவதாக ராம் ரஹீம் காவல்துறையிடம் கூறியிருக்கிறார். ஆனால் ராம் ரஹீம், தனது ஆசிரமத்தில் இருந்த இரு சிறுமிகளைப் பாலியல் பலாத்காரம் செய்த விவகாரம் ஐயத்திற்கிடமின்றி போதிய சாட்சியங்களுடன் நிரூபிக்கப்பட்டு விட்டதால், அவரது பொய்களை ஏற்றுக் கொள்ளாத நீதிபதி; உடனடியாக ராம் ரஹீமிடம்,