பட்டேல் சமூக நலனுக்காக துவங்கப்பட்ட அரசியல் கட்சியான PAAS ( Patidar Anamat Andolan Samiti ) தலைவர்களில் ஒருவரான அஸ்வின் பட்டேல் இது குறித்துக் கருத்து தெரிவிக்கையில், 2015 ஆம் ஆண்டு, ஹர்திக், தனது பெண் தோழி ஒருவருடன் முஸோரிக்குச் சென்று தங்கியிருந்தமைக்குத் தன்னிடம் ஆடியோ பதிவுகள் மற்றும் டெலிஃபோன் அழைப்புப் பதிவுகள் அடங்கிய ஆதாரம் உண்டு எனவும், ஹர்திக்குக்கு 4 நாட்கள் அவகாசம் அளிக்கிறோம், அதற்குள் அவர், தன் மீதான குற்றச்சாட்டை இல்லையென நிரூபிக்காவிட்டால், தன்னிடமுள்ள ஆதாரங்களை தான் ஊடகத்தின் முன் வைக்க வேண்டியதாக இருக்கும் எனவும் எச்சரித்துள்ளார். அது மட்டுமல்ல, பட்டேல் இனத்தலைவர்கள், தங்களது அதிகாரத்தை இப்படி முறைகேடாகப் பயன்படுத்துவது தவறு என்றும் அவர் கூறியுள்ளார்.