இது வரை அப்படிச் சேர்ந்த நிதி சுமார் 9 கோடி ரூபாய் பாதிக்கப்பட்டவர்களைப் போய் அடையாமல் வீணே கிடக்கிறது, அந்த இழப்பீட்டுத் தொகை உரியவர்களைச் சென்றடைய வேண்டுமென்றால், பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கான இழப்பீட்டுத் தொகை கோரி விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களின் அடிப்படையில் தான் இழப்பீடு பெற முடியும் எனும் நிலையில் விவரமறிந்து இதுவரை அப்படி வந்த விண்ணப்பங்களும் வெகு குறைவு. விண்ணப்பங்கள் பெறப்பட்டதும் சிறைக் கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சியர், தகுதிகாண் அதிகாரி எனும் மூவர் குழு அவற்றைச் சரிபார்க்கும், பின்னர் சரி பார்க்கப்பட்ட விண்ணப்பங்கள் சிறைத்துறை நிர்வாகத்துக்கு இறுதி ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு இழப்பீட்டுத் தொகை வழங்குதல் உறுதி செய்யப்படும் எனவும் பெயர் வெளியிட விரும்பாத சிறைத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.