மாநிலப் பெண்கள் ஆணையத்தின் முன்னாள் தலைவர், வி, வசந்தி தேவி, இது குறித்துப் பேசும் போது, திருத்தப்பட்ட மகப்பேறு விடுப்புச் சட்டத்தால், முதலாளிகள் நிச்சயமாகத் தங்களது நிறுவன வேலை வாய்ப்புகளில் பெண் ஊழியர்களைப் புறக்கணித்து விட்டு ஆண் ஊழியர்களுக்கு முன்னுரிமை தர அதிக வாய்ப்புகள் உண்டு. அந்த வகையில் இந்தச் சட்டம் பெண்களின் வேலை வாய்ப்பில் பின்னடைவைத் தந்தாலும், அனைத்து நிறுவனங்களும் அதே முறையப் பின்பற்றும் என்று உறுதியாகக் கூற முடியாது. முழுமையாக லாப நோக்கை மட்டும் கணக்கில் கொள்ளாமல் தொழிலாளர் நலன் கருதி நியாயமாக நடந்து கொள்ளும் வியாபார, தொழில் நிறுவனங்களும் நமது நாட்டில் இருக்கத்தான் செய்கின்றன. அத்தகைய நிறுவனங்களில் பணி புரியும் பெண்களுக்கு இந்தச் சட்டம் ஒரு வரப்பிரசாதம் தானே! என்றார்.