திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

மீண்டும் உக்ரைனிலிருந்து உலகை உலுக்க புறப்பட்டு வந்திருக்கிறது புதிய மால்வேர்!

ரஷ்யாவிலிருந்து பரவத் தொடங்கிய இந்த மால்வேர் ஐரோப்பாவின் அனைத்து கணிகளையும் ஊடுருவியதோடு மொத்த உலகையுமே ஒரு ஆட்டு ஆட்டி வைக்கப் போவதாக என் உள்ளுணர்வு சொல்வதால் எனக்கு மிகுந்த கவலையாக

News image
Updated On :22 ஜூலை 2025, 11:18 am

RKV

கடந்த மே மாதத்தில் உலகையே உலுக்கிய இணைய வைரஸ் போலவே இப்போதும் புதிதாக ஒரு மால்வேர், இணைய வைரஸ் உலக நாடுகளிடையே பரவிக் கொண்டிருக்கிறதாம். இந்தப் புதிய மால்வேர், ரஷ்யாவின் உக்ரைனில் விதைக்கப் பட்டதாகக் கருதப்படுகிறது. இது, மே மாதத்தில் உலகின் முக்கிய நாடுகள் அனைத்திலும் உள்ள மிகப் பெரிய மருத்துவமனைகள், நிதி நிறுவனங்கள், வங்கிகள், கல்லூரிகளின் முக்கியமான டேட்டா ரெகார்டுகள் அனைத்தையும் முடக்கிய இணைய வைரஸுக்கு சற்றும் குறைந்ததல்ல. அப்போதைய இணையத் தாக்குதலின் போது; இணையத் திருடர்கள் எனப்படும் ஹேக்கர்கள் கேட்கும் தொகையை அளித்தால் மட்டுமே குறிப்பிட்ட மால்வேர்களின் தாக்குதலிலிருந்து சம்மந்தப் பட்ட நிறுவனங்களின் கணினிகள் விடுதலை செய்யப்பட முடியும். என அறிவிக்கப் பட்டிருந்தது.

அதற்கு சற்றும் குறைவில்லாத வகையில் நேற்று மதியத்திலிருந்து உலகின் பல நாடுகளில் அதைக் காட்டிலும் கூடுதல் வலிமை கொண்ட இணைய வைரஸ் ஒன்று தன் வேலையைக் காட்டத் தொடங்கி உள்ளது. உலகெங்கிலும் இருந்து பலர் மால்வேர் தாக்குதலுக்குட்பட்டு செயலிழந்து விட்ட தங்கள் மடிக்கணினிகள் மற்றும் மேஜைக் கணினிகளின் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.

ரஷ்யாவிலிருந்து பரவத் தொடங்கிய இந்த மால்வேர் ஐரோப்பாவின் அனைத்து கணிகளையும் ஊடுருவியதோடு மொத்த உலகையுமே ஒரு ஆட்டு ஆட்டி வைக்கப் போவதாக என் உள்ளுணர்வு சொல்வதால் எனக்கு மிகுந்த கவலையாக இருக்கிறது என இன்ஃபோசேஃப் எனும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் செயல் தலைவர் விக்டர் ஸோரா குறிப்பிட்டுள்ளார். 

ஐரோப்பாவில் 60% கணினிகளைத் தாக்கி முடக்கியுள்ள இந்த வைரஸ் உக்ரைனிலும் கணிசமாகத்ட் ஹன் கைவரிசையைக் காட்டியிருக்கிறது. மிகப்பெரிய மால்கள், மருத்துவமனைகள், வங்கிகள், கேஸ் ஏஜன்ஸிகள், என முக்கியமான வர்த்தக மற்றும் சேவை நிறுவனங்களின் கணினிகளை எல்லா முடக்கியுள்ள இந்த மால்வேரை எப்படி ஒழித்துக் கட்டுவது என கணிப்பொறியியல் வல்லுனர்கள் தற்போது தலைமுடியைப் பற்றிக் கொண்டு கடுமையாக விவாதித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.