துணைக் குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடும் பொருட்டு மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு, தான் இதுவரை பொறுப்பு வகித்து வந்த பதவிகளான, தகவல் தொடர்பு, ஒளிபரப்புத்துறை அமைச்சர் மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஆகிய இரண்டு பதவிகளையும் ராஜினாமா செய்துள்ளார். அவரது பொறுப்புகள் முறையே ஸ்மிருதி இரானிக்கும், அமைச்சர் நரேந்திர தோமருக்கும் பங்கிடப்பட்டு அவர்கள் ஏற்கனவே வகித்து வரும் பொறுப்புகளுடன் கூடுதல் பொறுப்புகளாக வழங்கப் பட்டுள்ளன. முன்னதாக அமைச்சர் ஸ்மிருதி இரானி, ஜவுளித்துறை அமைச்சர் பொறுப்பையும், அமைச்சர் நரேந்திர தோமர் சுரங்கத் துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.