“இன்று நீ ஜல்லிக்கட்டு வேண்டும், நாட்டு மாடு வேண்டும் என்று போராடி, மத்திய, மாநில அரசுகளை நிர்பந்தித்து அவசரச் சட்டம் கொண்டு வரச் செய்து ஜல்லிக்கட்டு நடத்துவாய். அது மட்டும் போதுமா நாட்டுக்காளைகளை வளர்க்க? 60 களில் வந்த பசுமைப் புரட்சி உனக்கு வேண்டாம், 80 களில் வந்த வெண்மைப் புரட்சியும் உனக்கு வேண்டாம், கார், ரயில், விமானத்தில் பயணம் செய்யாதே, பெற்றோர்களிடம் சொல்லி நாட்டுக் காளை வாங்கி, கட்டை வண்டியில் பூட்டி அதிலேயே பயணம் செய். அப்போது தானே காளைகளை வளர்க்க முடியும்? ஒரு நாள் ஜல்லிக்கட்டு மட்டும் நடத்தினால் எப்படி நீ காளையை வளர்க்க முடியும்? நிறைய நாட்டுக் காளைகள் உற்பத்தி வரணும், சாணம் போடனும், அப்போ தான் ஆர்கானிக்னு சொன்னா, நீ வீட்டுக்கு வீடு இரண்டு காளைகள் அல்லது 4 பசுமாடுகள் இல்ல வச்சிருக்கணும். அப்படி வச்சிருந்தா அதை வளர்ப்பது யார்? கம்ப்யூட்டர் கல்வி படித்து விட்டு நீ சென்னையிலும், மும்பையிலும், அமெரிக்காவிலும் இருந்தால் இங்கே மாடு வளர்ப்பதற்கு யார் இருப்பார்கள் கீழே? இளிச்சவாயன் தாழ்த்தப் பட்டவன் கிடைப்பான், அவனை மாடு மேய்க்கப் போட்டு விட்டு நீ அமெரிக்கா போய் விடுவாய். இது தான் தமிழர் கலாச்சாரமா? மீண்டும் தமிழ் சமுதாயத்தை ஆண்டான் அடிமை சமூக நிலைக்கு கொண்டு போவதற்கு தான் நீங்கள் இப்போது போராடிக் கொண்டிருக்கிறீர்களா?”