என்னுடைய அரசியல் பயணம் இன்று மாலை 5 மணியிலிருந்து தொடங்குகிறது: தீபா!
என் அத்தையைக் குற்றவாளி என்று சொல்பவர்கள் தான் குற்றவாளிகள்!!! ஏன் அவர் செய்த தியாகங்களைப் பற்றி எவரும் நினைத்துப் பார்க்கவில்லை


இன்று ஃபிப்ரவரி 24 ஆம் நாள் மறைந்த முதல்வர் ஜெ பிறந்த தினத்தை முன்னிட்டு அதிமுக வினர் தமிழ்நாடெங்கும் அவரது பிறந்த நாளை கொண்டாடி வரும் வேளையில். ஜெ வின் அண்ணன் மகள் தீபா தனது அத்தையின் நினைவிடத்துக்கு அஞ்சலி செலுத்த வந்திருந்தார். அவரிடம் செய்தியாளர்கள் பேசுகையில் தீபா வெளியிட்ட கருத்துகள்;
“என் அத்தையின் ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் நான் நேரில் சென்று வாழ்த்துக் கூறி அவரிடம் ஆசி பெற்று வருவேன். இன்று அவர் இல்லாத நிலையில் என்னால் காலை முதல் எந்த வேலையும் செய்ய முடியவில்லை. அவரது நினைவாகவே இருக்கிறேன். இன்று அவர் இருந்திருந்தால் எவ்வளவு சந்தோசமாக இருக்கும் என்று நினைத்துப் பார்க்கிறேன். என்னுடைய அரசியல் பயணம் மிகவும் தீவிரமாகத்தான் இருக்கும். அதைப் பற்றி இன்று மாலை 5 மணிக்கு எனது இல்லத்தில் இருந்து அறிவிப்பேன். என் அத்தையைக் குற்றவாளி என்று சொல்பவர்கள் தான் குற்றவாளிகள்!!! ஏன் அவர் செய்த தியாகங்களைப் பற்றி எவரும் நினைத்துப் பார்க்கவில்லை என்று தெரியவில்லை.”
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...