கர்நாடக மாநிலம் உடுப்பியைச் சேர்ந்த டிரைவரும், சூழல் போராளியுமான ஜோசப் அதற்கொரு நல்ல வழி சொல்கிறார். எதிர்பார்த்த ஆழங்களில் நீரின்றி கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகளை சுற்றி அப்படியே பத்தடி நீளம், பத்தடி அகலத்தில் ஒரு குழியை வெட்டி, ஆழ்துளைக் கிணற்றின் வாய்ப்பகுதியை வடிகட்டியாகச் செயல்படுத்தத் தக்க மூடி போன்ற அமைப்பால் மூடி அதன் திறப்பு வெறும் 5 மி.மீட்டர் அளவுக்கு மட்டுமே இருக்குமாறு திறந்து வைத்துப் அதைப் பொருத்த வேண்டும். இப்போது மழைக்காலங்களில் இந்த கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகள் மிகச்சிறந்த மழைநீர் சேகரிப்பு மையங்களாக செயல்படக்கூடிய அளவிலான திட்டம் தயார். மேற்புறத்தில் கிணறு போன்ற அமைப்பாலும், உள்ளே மூடப்பட்ட வாய்ப்பகுதி இருப்பதாலும் விவரமறியாமல் குழந்தைகள் விளையாட்டுத் தனமாக அதனுள் விழ நேராது. இப்போது ஆழ்துளைக் கிணற்றுக்கும் ஒரு முறையான பயன் கிட்டியது. அதனுள் தவறி விழக்கூடிய மனித மற்றும் விலங்கு உயிர்களுக்கும் ஒரு பாதுகாப்பு கிடைத்தது என்றாகி விடும்.