விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களுக்கு ஆம்புலன்ஸ் சேவை எத்தனை அவசியமோ, அத்தனை அவசியம் சரியான முதலுதவி சேவைகளும் கூட. ஆனால் நகரத்தின் ஜன நெரிசலில், வாகன நெருக்கடியில் திடீரென நிகழ்ந்து விடும் பயங்கர விபத்துகளின் விளைவுகள் மிக மோசமானவையாக இருந்து பாதிக்கப் பட்டவர்கள் உரிய நேரத்தில் உரிய முதலுதவிகளும், சிகிச்சைகளும் கிடைக்காத காரணத்தால் உயிரிழப்பதும், உறுப்புகளை இழப்பதும் கூட சில நேரங்களில் நிகழ்ந்து விடுவது உண்டு. அம்மாதிரியான நேரங்களில் விதியின் மீது பழியைப் போட்டு விட்டு ஒதுங்கி விடுவதைக் காட்டிலும், அப்படியான சிக்கலான தருணங்களை எவ்வித இழப்புகளும் இன்றி எப்படிக் கடப்பது? என்று யோசிப்பது தானே புத்திசாலித்தனம்!