ஆனால் இதைப் பற்றி பேசுகையில் சமூக ஆர்வலர்கள் கூறூம் குற்றச் சாட்டுகள் என்னவெனில்; மக்களுக்கு இன்னமும் இந்த திட்டம் மற்றும் இதன் பலன்களைப் பற்றிய போதிய ஞானமும், தெளிவும் இல்லை. அவர்களது அறியாமையப் பயன்படுத்திக் கொண்டு அதிகாரமட்டத்தில் இருப்பவர்கள் தங்களுக்கு வேண்டப்பட்டவர்கள் மற்றும் பணக்காரர்களுக்கு ஆதரவாக இது போன்ற நலத்திட்டங்களை தாரை வார்த்து விடுகிறார்கள். என்றனர். இதைப் பற்றி ராய்பூர் மாவட்ட ஆட்சியர் அலர்மேல் மங்கையிடம் தெரிவித்த போது; அவர் ‘ மத்திய அரசின் த்ய்ய்மை இந்தியா திட்டம் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மக்களின் பயன்பாட்டுக்காக திட்டமிட்டு உருவாக்கப் பட்டது, இதில் இப்படியான சட்ட மீறல்களுக்கோ, அதிகார துஷ்பிரயோகங்களுக்கோ அனுமதி இல்லை. இது குறித்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளேன். உண்மை அறிந்ததும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.