உதாரணத்திற்கு; சென்னை பெரம்பூரில் இருக்கும் திரு.வி.க நகர் பகுதியில் சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு நிலத்தடி நீர் மட்டம் 2.88 மீட்டர் குறைந்துள்ளதாக மெட்ரோ வாட்டர் செய்தி அட்டவணை சொல்கிறது. 2016 ஆம் ஆண்டில் இதே பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் 2 மீட்டர் குறைந்திருந்ததாம். ஆக மொத்தம் இந்த ஆண்டின் 2.88 மீட்டரும் சேர்ந்து அந்தப் பகுதிகளில் இப்போதைய நிலத்தடி நீர் மட்டம் ஒட்டுமொத்தமாக அபாயகரமான அளவில் 4.88 மீட்டர் குறைந்து விட்டது. இதற்கு பருவ மழை பொய்த்தது, மழை நீரைத் தேக்கி வைக்க போதிய நீராதாரங்கள் இல்லை எனும் குற்றச்சாட்டுகளைத் தாண்டி தங்களுக்கு கிடைத்த குடிநீர் வசதிகளை கண்மூடித்தனமாகக் கையாண்டு வீணடித்த பெருமை மக்களையும் சேரும் என்கின்றன நீர் மேலாண்மை பற்றிப் பேசும் கட்டுரைகள்.