சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு!
/

நெல்லித்தோப்பு தொகுதி காலி என்ற அரசு அறிவிப்பை திரும்பப் பெற வலியுறுத்தல்

புதுச்சேரியில் நெல்லித்தோப்பு தொகுதியை காலி என அரசு வெளியிட்ட அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என வழக்குரைஞர் எஸ்.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :24 ஜனவரி 2024, 6:20 pm

ப. சுஜித்குமார்

புதுச்சேரி, 

புதுச்சேரியில் நெல்லித்தோப்பு தொகுதியை காலி என அரசு வெளியிட்ட அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என வழக்குரைஞர் எஸ்.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது: முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமி தேர்தலில் போட்டியிடாமலேயே முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். தற்போது அவர் 6 மாதங்களுக்குள் தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக தேர்வு பெற வேண்டும்.


இந்நிலையில் தற்போது நெல்லித்தோப்பு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜான்குமார் கடந்த 15-ம் தேதி ராஜிநாமா செய்துள்ளார். அப்போது அவர் முதல்வர் நாராயணசாமிக்காக தனது பதவியை விட்டு விலகியதாக தெரிவித்தார். உடனே அவரது ராஜிநாமா ஏற்கப்பட்டு தொகுதி காலி என அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இது சட்டத்தை மீறிய செயலாகும். அரசு உடனே அந்த அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என தலைமைச் செயலாளரிடமும் மனு அளிக்கப்பட்டுள்ளது.

ஜான்குமார் வீட்டில் வருமானவரித்துறையினர் நடத்திய சோதனையில் ரூ.1.6 கோடியை பறிமுதல் செய்துள்ளனர். தேர்தலுக்காக அவர் முதல்வரிடம் பணம் வாங்கியுள்ளார் என புகார்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து விசாரிக்க வேண்டும் என சிபிஐயிடம் புகார் அளித்துள்ளேன்.

மேலும் நெல்லித்தோப்பு தொகுதி இடைத் தேர்தலை 6 மாதங்கள் கழித்து தான் நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்திடமும் மனு அளித்துள்ளேன். இவற்றை நிறைவேற்றாவிட்டால் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளேன் என்றார் சுப்பிரமணியன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.