மணற்கொள்ளை விவகாரத்தில் கேரளாவுக்கு இருக்கும் விழிப்புணர்வு தமிழகத்துக்கு ஏன் இல்லை?
கேரள மாநிலத்தில் 45 ஆறுகள் பாய்கின்றன. ஆனாலும்கூட அந்த மாநிலத்தில் 1994-ஆம் ஆண்டு முதல் எந்த ஓர் ஆற்றிலிருந்தும் ஒரு கைப்பிடி மணலைக்கூட அள்ளமுடியாத அளவுக்கு அங்கு சட்டங்கள் கடுமையாக்கப்பட்டுள்ளன.











